Skip to main content

Posts

Podcast Indroru Kadhal | En Kadhal | Epi : 1

  Podcast Name : Indroru Kadhal Season : One Episode Name : En Kadhal Episode : One

Podcast Indroru Kadhal Epi : Natpenum Nadachirappu

We have started new podcasting about stories and etc... Keep supporting...  Podcast Name : Indroru Kadhal Season : One Episode Name : Natpenum Nadachirappu

காப்பாளன் - முதல் பகுதி

Ad Poster from site அன்புள்ள தோழமைகளே, மகிழ்ச்சியான அறிவிப்பு... நான் எழுதிய " காப்பாளன் " நாவல் புத்தகமாக பிரசுரமாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்... தாங்கள் என் blog மற்றும் மற்ற தளங்கலிருந்தும் எனக்கு அளிக்கும் ஆதரவிற்கு நன்றி இனியும் ஆதரவை தொடர வேண்டுகிறேன்... ஒரு மாதம், கூப்பன் பயன்படுத்தி புத்தக விலையில் 20% தள்ளுபடியில் வாங்கலாம் புத்தகம் வாங்கும் link கீழே தரபட்டுள்ளது... நன்றி... Book Purchase Link Amazon.in Purchase Profile Link அன்புடன், ராஜசேகரன் போஸ்

இமையா விழிகள்

வருடங்கள் பல நிமிடங்களாய் கடந்தாலென்ன, இமைகளில் உன் நினைவு நித்தம் இமைக்க மறக்குதடி... கண்கள் சந்தித்த ஒரு கணமே, கருவிழியில் ராட்டிணமாய் சுழலுதடி... கயல்விழியாள் பார்வை தனில், கணையாழியாய் மாட்டிக்கொண்டேன் மீள தான் வழியில்லை... விழி செய்யும் கதிர்வீச்சிலிருந்து மீளவும் மனமில்லை... கூர்விழியாள் கோபம் தனில், என்னிதயம் குத்தூசியாய் துளைக்குதடி... சொற்கள் எனும் கூர்வாளால், கூறு போட்டாய் இதயம் தனை... வலியும் சுகம் தானே... நீ மடந்தையானால் என் வாழ் நாளும் நரகம் அன்றோ... சிப்பி இதழ் திறவாய் என் சித்திரமே...

குருவி

காதல் குருவி பறந்து சென்றடையும் இடம் தாம் காமமா? காம கழுகு பயணத்தில் காதல் கூட்டை அடைய முடியுமோ? பிறப்புகள் இரட்டையேயெனிலும், கொண்டிருப்பது ஒத்த உணர்வல்லவே... காதலில் கூடலும் இயல்பே எனில்! புணர்ந்து கூடலில் இன்பமும் உண்டோ காதலின் மனதிற்க்கு!? குளிரில் இதமளிக்கும் நெருப்புக்கும், உணர்விழந்த உடலை எரிக்கும் நெருப்புக்கும் உள்ள பற்றே... குறிப்பு : பெண்களையும் குழந்தைகளையும் புணரும் காமுகரை எண்ணுகையில் வாழும் நொடியினை நொந்து இறக்குமாரு தண்டிக்க வல்லவோ தோன்றுகிறது... தன்னிலை உணர காதல் செய் அது உன்னை செம்மை படுத்தும்... உலகில் ஜனிக்கும் புல்லுக்கும் உணர்வழித்திருக்கிறான் இறைவன்... உணர்வை உணர்வு கொள் மானிடா...

வழி

வாழ்க்கை ஒரு நீண்ட வழி பயணமா? குறுகிய வழி பயணமா? என்ற ஆய்வு இருக்க! வழியைத் தேடி திரியும் மானிடம்! உயிரினம் பல வழி உணவாக முடிய! உணவை தேடி வழியோடும் மானிடம்! ஆட்டின் வழி உணவு எனில்! இறக்கவா பிறந்தோமென வினவும் மானிடம்!! வலி தான் வழியோ!?...

காதல் மனம்

காதல் மனதின் நிலை, அழும் குழந்தை நிலேயே... தான் அறியா தன்நிலை, மற்றோர் அறிய கூவலிடும்...